அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு திரும்ப பெற்றார்

Share

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு திரும்ப பெற்றார். பாஜக முன்​னாள் மாநில தலை​வ​ரான அண்​ணா​மலை ‘ திமுக பைல்​ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்​சர்​கள் பலரது சொத்​துப்​பட்​டியல் குறித்த விவரங்​களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யிட்டார். அதில் குறிப்​பாக திமுக எம்​.பி.​ டி.ஆர்​.​பாலு மற்​றும் அவரது மகன் டி.ஆர்​.பி.​ராஜா மற்​றும் அவர்​களின் குடும்​பத்​தினருக்​கு சொந்​த​மாக 21 நிறு​வனங்​கள் உள்​ள​தாக​வும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்​துகள் உள்​ள​தாக​வும் குறிப்​பிட்டிருந்​தார். இது தனது பெயருக்கும், குடும்பத்தினர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்தார். இந்த வழக்கு சென்னைப் பெருநகர சைதாப்பேட்டை 17- வது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 26-ம் தேதி நடந்த விசாரணையின்போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலையே குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து வழக்கு 30-ம் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை டி.ஆர். பாலு திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>