அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் – ஈரானில் பலி எண்ணிக்கை 1,045 ஆக உயர்வு

Share

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் நேற்று 5-வது நாளை எட்டியது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் விரிவடைந்துள்ள இந்த போரில் ஈரானில் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலிகாமேனி உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். மிகவும் தீவிரமாக நடந்து வரும் இந்த போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து விட்டது. அதன்படி நாடு முழுவதும் இதுவரை 1,045 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு அரசு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இவை அடையாளம் காணப்பட்டு அடக்கத்துக்கு தயாராக உள்ள உடல்களின் எண்ணிக்கை என ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் நலனுக்கான அந்த நிறுவனம் கூறியிருந்தது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>