வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த அரங்கத்தில் வடசென்னை பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3-வது கட்ட படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் ராஜன் கதாபாத்திரத்தி நடித்த அமீரும், சந்திரா கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாவும் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். 3 மாதத்தில் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைகிறது. வருகிற தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘அரசன்’ படம் நவம்பர் 6-ல் வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>