அவசியமான தருணங்களில் தகுந்த ஆலோசனை வழங்க எவருமற்றவராக விளங்கும் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் க.ஜெசீதன்!

Share

பு.கஜிந்தன்

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் நிகழ்வு ஒன்றில் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

அண்மையில் மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கட்டுடை பகுதியில் உள்ள வீதி ஒன்றின் புனரமைப்பு பணிகளுக்காக அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று இடம்பெற்றது.

இதில் தவிசாளர் கந்தையா ஜெசீதன் காலணிகளை கழற்றாமல் மங்கல விளக்கேற்றி வைத்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

மானிப்பாய் பிரதேசத்தின் முதற் குடிமகனாக உள்ள தவிசாளர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் காலணியுடன் மங்கல விளக்கேற்றி வைத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>