அவுஸ்த்திரேலியா வாழ் ஈழத்து எழுத்தாளரும் தனது படைப்புக்களுக்காக பல விருதுகளைப் பெற்றவருமான எழுத்தாளர் பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவல் வெளியீட்டு விழா கனடாவில் 29 யூலை 2023 அன்று நடைபெறுகின்றது.
நேற்று முன் தினம் கனடா வந்துள்ள அவர் நேற்று ஸ்காபுறோவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களைச் சந்தித்தார். அப்போது பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவல் வெளியீட்டு விழா தொடர்பாகவும் கலந்துரையாடப்பெற்றது. இங்கு காணப்படும் படங்கள் அப்போது எடுக்கப்பெற்றவையாகும் .மேலதிக விபரங்களுக்கு இத்துடன் உள்ள அழைப்பைப் பார்வையிடவும்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>