ஆளுனருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Share

மசோதாக்களை ஆளுனர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

      தமிழக ஆளுனர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில் நிதித்துறை செயலர் ஒருவரை நியமிக்க ஏதுவாக சட்ட திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்த மசோதாவை அதிபருக்கு தமிழ்நாடு ஆளுனர் அனுப்பி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுனருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மசோதாக்களை ஆளுனர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது. ஆளுனரின் நடவடிக்கை தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>