இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் – உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தல்

Share

இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியிருந்த நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது. அந்த தலையங்கத்தில், “இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் வெவ்வேறு மாநிலங்களில் நிலவும் முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும். அந்த தலைவர் ஸ்டாலினா, மம்தாவா அல்லது வேறு ஒருவரா என்பதை சீக்கிரம் முடிவு செய்வது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>