இந்திய ஆக்கிரமிப்பு படைகளினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட 75 பணியாளர்களுக்கான 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Share

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், 1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் போது படுகொலை செய்யப்பட்ட 75 பணியாளர்களுக்கான 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தீபன் திலீசன் தலைமையில் இடம்பெற்றது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு கடமைபுரிந்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட மகனின் மகனின் தாயார் ஒருவர் ஒருவர் பிரதான சுடனினை ஏற்றி வைத்ததுடன் நினைவேந்தல் மலரஞ்சலினை செலுத்தினார்.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>