கர்நாடக மாநிலத்தில சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மற்றும் தாவணகரே தெற்கு ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும். இரண்டு தொகுதி எம்.எல்.எ.-க்களும் உயிரிழந்த காரணத்தினால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கு தயார் என சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் “இடைத்தேர்தலுக்கு தயாராகும் பணி முடிவடைந்துள்ளது. இடைத்தேர்தலுக்கு நாங்கள் தயார்” என்றார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>