ஊழியர்களின் அசமந்தம் யாழ். மாநகரைப் பாதிக்கும் நடைமுறைகளை இறுக்குங்கள் – மயூரன் சுட்டிக்காட்டு!

Share

ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாமை ஊழியர்களின் அர்ப்பணிப்பின்மையை வெளிப்படுத்துகின்றது. இந்த அசமந்தப்போக்கால் மாநகரசபை இடர்களைச் சந்திக்கின்றது என்று மாநகரசபை உறுப்பினர் மயூரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாநகரசபை அமர்வு 17ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆக்கபூர்வமான பலதீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொலித்தீன் பாவனைத் தடை, களியாட்ட நிகழ்வு ஒழுங்குபடுத்தல், சுகாதார நடைமுறை போன்று பல விடயங்கள் தொடர்பில் ஆறு மாதங்களாக காத்திரமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஊழியர்கள் பலர் முழுநேரப்பணி செய்வதில்லை. மாநகரசபை உறுப்பினர்களின் உச்சகட்டப் பணி என்ன என்பது தெரிந்தாகவேண்டும். சிறந்த சுகாதாரம்மிக்க மாநகரசபையாக வளர்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எனவே எதிர்வரும் ஆண்டிலிருந்து தண்டப்பணம் அறவிடுதல், சுகாதாரநடை முறைகள் என்பவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>