எஸ்ஐஆர் பணிகளில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கவனமாக பணியாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

Share

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எஸ்ஐஆர் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்காணிப்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஐடி பிரிவு பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>