அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பில் அவர் இருப்பார். தற்போது, தலைவர் பொறுப்பில், மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனின் முன்னாள் பிரதமர் பிலமோன் யாங்க் உள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்னலெனா பேர்பாக் கூறுகையில், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன, மேலும் இந்த சவாலான காலங்களில் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>