ஒட்டுசுட்டானில் வாகன விபத்து : இரு இளைஞர்கள் பலி !

Share

[6-09-2023]

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுசுட்டான், மாங்குளத்தில் நேற்றிரவு(05) உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முள்ளியவளை – பொன்னகர் பகுதியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதான இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>