ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான ‘ஹரக் கட்டா’ 12 கோடி ரூபா பெற்ற இலஞ்ச ஊழல் வழக்கு:

Share

முன்னாள் நீதி அமைச்சரின் மகன் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரின் மறியல் நீடிப்பு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவின் மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் ஜூலை 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு 17ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.கைது செய்யப்பட்டவர்கள்

* சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ (முன்னாள் நீதி அமைச்சரின் மகன்)
* சரித் அபேசிங்க (ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளர்)
* அருண வருணஹெந்திகே (சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்)

வழக்கின் பின்னணி

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’வுக்கு சொகுசு வசதிகள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, அவரது மனைவியிடமிருந்து 1,200 இலட்சம் ரூபா (12 கோடி) இலஞ்சமாகப் பெறப்பட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிவான் அவர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் நீடித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>