கனடா- ஸ்காபுறோவில் இசை ரசிகர்களுக்கு `இசையின்பத்தை` அள்ளி வழங்க பிரபல பாடகர் பாடகி ஆகிய இருவர் தமிழ்நாட்டிலிருந்து கனடா வந்தனர்.

Share

எதிர்வரும் அக்டோபர் 04ம் திகதி, சனிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள தமிழிசை கலா மன்ற மண்டபத்தில் நண்பர் கேதீஸ் அவர்களின் `தமிழாரம் `தொலைக்காட்சி நிறுவனம் நடத்தம் 7 சுரங்கள் பாடல் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பாடகராகவும் வருகை தந்துள்ளார் சீ-தமிழ் தொலைக்காட்சியின் வெற்றியாளர் வர்ஷா அவர்கள்.

அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் குரு யோகராஜா அவர்களின் ஏற்பாட்டில் நடக்கும் `நெஞ்சம் மறப்பதில்லை` இசை நிகழ்ச்சியிலும் தமிழ்நாட்டிலிருந்து இருந்து வருகை தந்த கலை மாமணி ராமு அவர்களோடும் இணைந்து பாடவுள்ளார்.

மேற்படி இரண்டு பாடகர்களும் 1ம் திகதி புதன்கிழமையன்று ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவர்கள் இருவரையும் நண்பர்கள் ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த நண்பர்கள் ஆகியோர் வரவேற்பதைக் காணலாம்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>