கனடிய மத்திய அரசாங்கத்தால் அமுல் செய்யப்பெற்ற ஜிஎஸ்டி வரி தற்காலிக விலக்கு 15-02-2025 சனிக்கிழமையன்று நிறைவுக்கு வருகின்றது

Share

கனடிய மத்திய அரசாங்கத்தால் அமுல் செய்யப்பெற்ற ஜிஎஸ்டி வரி தற்காலிக விலக்கு 15-02-2025 சனிக்கிழமையன்று நிறைவுக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த வாய்ப்பு நேரம் முடிவதற்குள் நீங்கள் எவ்வாறு இந்த வரி விலக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இங்கே காட்டப்படுகின்றது

கடந்த 2024 டிசம்பரில் மீண்டும் அமுலுக்கு வந்த மத்திய வரி விலக்கை பயன்படுத்த 15ம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு வரை எமக்கு கால அவகாசம் உள்ளது

டிசம்பர் 14 முதல் பிப்ரவரி 15 வரை இரண்டு மாத காலத்திற்கு அனைத்து மளிகைப் பொருட்கள், உணவக உணவு, குழந்தைகளின் உடைகள், பொம்மைகள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள், அத்துடன் பியர் மற்றும் மற்றும் வயின் ஆகியவற்றிலிருந்து மத்திய மற்றும் மாகாண வரிக்கு கனடியர்களுக்கான வாழ்க்கைச் செலவை குறைக்கும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது

கனடிய மத்திய அரசின் வரி விலக்கின் முதல் மாதத்தில் நுகர்வோர் செலவு உண்மையில் குறைந்துவிட்டதாக புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட புதிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, கனேடியர்களுக்கு “தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி, அவர்கள் விரும்பும் விஷயங்களைச் சேமிப்பதை” உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வரி விலக்கில் உள்ளடக்கப்படாமல் இருந்து பொருட்கள் சில:- வடிவமைக்கப்பட்ட எந்தவொரு சிறப்பு ஆடை அல்லது காலணிகளும் (வெட்சூட்டுகள், கால்பந்து கிளீட்கள், ஸ்கேட்டுகள், ஸ்கை பூட்ஸ் போன்றவை), வயதுவந்தவர்களுக்கான ஆடை, உடைகள் அல்லது ஒப்பனை மற்றும் நகைகள். ஆகியன

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>