கயானாவில் கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர்?

Share

கயானாவில் கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர்?.  தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக நேற்று சிறிய ரக கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 133 பேர் பயணித்தனர். கப்பல் நடுக்கடலில் பயணித்த போது தீடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர். இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், கடலில் மூழ்கிய 66 பேரின் நிலை என்ன? என்று தெரியவில்லை. இதனால் கடலில் மூழ்கிய 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>