காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.அதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டது ஆழ்ந்த நிம்மதி அளிக்கிறது. இஸ்ரேல் என்ஜினீயர் ஏவிநேடன், ஹமாஸ் இயக்கத்தின் பிடியில் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டது நினைவில் நிற்கிறது. அவரது குடும்பத்தை சந்தித்தேன். 2 ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்த சித்ரவதையையும், வேதனையையும் எவராலும் உண்மையாக புரிந்து கொள்ள முடியாது. என் சிந்தனைகள் அவர்களுடனே இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>