ந.லோகதயாளன்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் மாபெரும் சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் 30-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் . தந்தை செல்வா கலையரங்கில்
உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மாநாட்டுக்கு முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாகத் தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த பின்னரே மாநாடு ஆரம்பமானது.
வடக்கு – கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சர்வதேச இராஜதந்திரிகள், அரசியல் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.