பொதுமக்களால் சீரமைக்கப்பட்ட வீதி
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியில் அமைந்துள்ள பாலமானது சில வருடகாலமாக புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
இதனால் மக்கள் தற்காலிக பாதையினை பயன்படுத்தி வந்தனர். குறித்த தற்காலிக பாதையும் மக்கள் பயணிக்கமுடியாத நிலையில் சேதம் அடைந்துள்ளது.
குறித்த பாலத்தின் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்து தருமாறு பல தடவைகள் முறையிட்டபோதும் திருத்தப்படவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் தருமபுரம் பகுதி இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கிரவல் மூலம் தமது சொந்த நிதியினையும், நேரத்தினையும், ஆளணியையும் பயன்படுத்தி சேதமடைந்த பகுதிகளை புனரமைப்பு செய்துள்ளனர்.
இந்த இளைஞர்களின் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>