சாவகச்சேரி செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம்!

Share

பு.கஜிந்தன்

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (29) வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் ஆரம்பமாகி, காலை 9 மணிக்கு விநாயகர் சித்திரத் தேரில் ஆரோகணித்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் இடம்பெற்றது.

இதன்போது பக்தர்கள் கற்பூரச்சட்டி மற்றும் அங்கப்பிரதஷ்சணை செய்து நேர்த்திக்கடனங்களையும் நிறைவேற்றினார்கள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>