டில்லி என்ன…அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பயப்பட மாட்டார் – ஓ.பன்னீர் செல்வம்

Share

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று  டில்லி சென்று, தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறுகையில், நாங்கள் டில்லிக்குச் சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். பயத்தில் ஏதேதோ பேசுகிறார் என்றார். இந்தநிலையில் டில்லி சென்றாலே முதல்வருக்கு பயம் என்ற டிடிவி தினகரன் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலடி அளித்துள்ளார். “டில்லி என்ன, அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் எந்த காலத்திலும் பணிய மாட்டார். திரு.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருக்கும் வரை தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது என்றார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>