இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை தம்மம் ஃபிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜும் இயக்கத்தில், சிக்யா என்டர்டெயின்மென்ட் சார்பில் குனீத் மோங்காவும், ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதி தேஷ்பாண்டேவும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இசைஞானி இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் இது 1540-வது திரைப்படமாகும். தற்போது வெளியாகியுள்ள ‘முத்துமணி’ பாடல் முற்றிலும் மாறுபட்ட ஒரு ‘ராஜா டிரான்ஸ்’ ரக காதல் பாடலாகும். இப்பாடலை இளையராஜாவே எழுதி, பிரபல பின்னணிப் பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார். பாடலோடு சேர்ந்து வெளியாகியுள்ள இதன் பிரத்யேக பாடல் காணொளியை பாரத் முரளிதரன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய முதன்முறைத் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவையும், கணேஷ் சிவா படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடலைத் தொடர்ந்து, ‘டோரதி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
‘டோரதி’ திரைப்படத்தின் ‘முத்துமணி’ பாடல் வெளியானது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>