தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியினரால் பிரசார பணிகள் முன்னெடுப்பு!

Share

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினரால் பிரசார பணிகள் 16-09-2024 அன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, காரைநகர், மாதகல் உட்பட்ட பகுதிகளில் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் , இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை மகளிர் அணி, இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வட்டுக்கோட்டை மூளாய் வேரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொகுதிக்கிளையின் பிரசாரகூட்டம் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>