நல்லூர் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிசில் முறைப்பாடு!

Share

திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை அரசியல் பழிவாங்கல் காரணமாக முன்னறிவித்தல் இன்றி உடனடியாக மூடும்படி சபை தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அறிந்த நிறுவன உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று வியாழக்கிழமை பதிவு செய்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>