சீனா வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹாய்னான் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து “பாகுபலி” ரக ராக்கெட் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ராக்கெட் ஏவப்படும்போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக பிரித்து அழைத்து செல்லும் ‘அபார்ட் சிஸ்டம்’ வெற்றிகரமாக செயல்பட்டது. இதில் விண்கலம் பாராசூட் மூலம் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. அதேபோல், ராக்கெட்டின் முதல் அடுக்கு திட்டமிட்டபடி செங்குத்தாக கடலில் தரையிறங்கி ஆச்சரியப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் நிலவு பயண போட்டியில் சீனா அடுத்தகட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இது விண்வெளித் துறையில் சீனாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>