நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து முதல் அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினர்

Share

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினர். நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை குறித்து சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்தார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களில், கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழு நேபாளம் செல்ல விஜய் உத்தரவிட்டுள்ளார். டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு காத்மாண்டு சென்று, தமிழர்களின் நிலை குறித்து அறிந்து, நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணியை ஒருங்கிணைக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>