புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்து காட்டிய மன்னார்/கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம்

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

04.09.2025

அண்மையில் இடம் பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் ச.லெசோடரன் அதிகூடிய புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாவது நிலையை பெற்றுள்ளார்.

குறிப்பாக இம் முறை மன்/றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அவர்களில் 8 மாணவர்கள் வெட்டு புள்ளி க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.

மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் ச.லெசோடரன் 174 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>