பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Share

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி இவ்வாறு பேசியுள்ளார்.

        வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதலமைச்சர் வெளியிட உள்ளார். விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஒருவேளை கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக அரசு உயரத்தப்போவதை தான் அமைச்சர் குறிப்பிடுகிறாரோ என்று இணையத்தில் அமைச்சரின் கருத்து வைரலாகியுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது அவர்களது உரிமை. ஆனால், எப்போதும் தனித்துதான் திமுக ஆட்சி அமைக்கும் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்” என்று தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>