மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் குதிப்பு

Share

(மன்னார் நிருபர்)

(11-01-2024)

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (11) காலை முதல் சுகயீன விடுமுறை , வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக சம்பள அதிகரிப்பு,ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை இ வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தூர இடங்களில் இருந்து மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>