முன்னை நாள் துணுக்காய் பிரதேச செயலாளர் அமரர் நா.நந்தகுமார் நினைவாக இரத்ததான நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை அன்று (23.07.2025) அன்று இடம்பெறுகின்றது
துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பணியாற்றிய அமரர் நா.நந்தகுமார் அவர்கள் தனது கடமை நேரத்தின் போது 29.06.2007 உயிரிழந்திருந்தார்
அவரது நினைவு தினத்தை நினைவு கூறும் முகமாக வருடந் தோறும் துணுக்காய் பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இந்த வருடமும் அவரது ஞாபகார்த்தமாக 23.07.2025(புதன்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் குருதித்தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்நிகழ்விற்கு முக்கியத்துவம் அளிக்கும் முகமாக ஆர்வமுடையவர்ளை இரத்ததானம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர் ஏற்பாட்டு குழுவினர்
துணுக்காய் அம்பலப்பெருமாள் குளம் தேக்கங்காடு பகுதியில் பணியின் நிமித்தம் சென்று வரும்போது மிலேச்சத்தனமான கிளைமோர் தாக்குதலில் அப்போதைய துணுக்காய் பிரதேச செயலாாளர் நாகலிங்கம் நந்தகுமார் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது