முள்ளியவளையில் நெற்கொள்வனவு ஆரம்பமாகிய பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட வன்னி மாவட்ட எம்.பி ரவிகரன்!

Share

ந.லோகதயாளன்.

விவசாயிகளிடமிருந்து உடனடியாக சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 08.07.2026அன்று பாராளுமன்றக்க குழு அறையில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதுடன், கடந்த 13.07.2026 ஆம் திகதியன்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரனிடமும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர் வலியுறுத்தலையடுத்து 15.07.2026ஆம் திகதியிலிருந்து முள்ளியவளை கமநல சேவைநிலையத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இவ்வாறு நெல்சந்தைப்படுத்தல் சபையினால் முள்ளியளையில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அங்கு 16.07.2026இன்று நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நெற்கொள்வனவு தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டதுடன் நிலமைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>