யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய 14 ம் திகதி சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் நாவந்துறை சென் மேரிஸ் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்த தலைமையில் நடைபெற்றது.

குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் யாழ் மாநகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, முன்னாள் வடமாகாண எதிர்கட்சித் தலைவர் தவராஜா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>