யாழ்ப்பாணத்தில் மூதாட்டியிடம் தாலியை அபகரித்த இருவர் கைது!

Share

யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் பெறுமதியான தாலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் மற்றும் தெல்லிப்பழையை பகுதியைச் சேர்ந்த முறையே 50 , 41 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை – தொண்டமானாறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்ப்பட்டுள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>