யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு!

Share

பு.கஜிந்தன்

அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வானது 13ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அனர்த்தங்களினால் அதிகமாக பாதிக்கப்படுகின்ற இடங்களை மையப்படுத்தி அரச திணைக்களங்கள், பாதுகாப்பு பிரிவினர், சமூக அமைப்புகளை அழைத்து அவர்களுக்கான முன்னாயத்தமாக அன்றைய செயலமர்வு நடைபெற்றது.

மழை வெள்ளம், இடி – மின்னல், சுனாமி தொடர்பான விழிப்புணர்வு முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயலமர்வு அமைந்தது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில், காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>