யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலி

Share

(மன்னார் நிருபர்)

(27-11-2023)

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (27) காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

-அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>