வடமராட்சியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் இன்று சடலமாக மீட்பு!

Share

பு.கஜிந்தன்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக்கிழமை அன்று கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், 17.03.2024 இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

மீன் பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர், மீனவர்களின் உதவியுடன் அவரை தேடி வந்தனர். அவர் பயணித்த தெப்பம் நேற்றையதினம் கரையொதுங்கியது.

இந்நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாத மீட்கப்பட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>