வட்டுக்கோட்டை – சங்கரத்தை பகுதியில் மூளையில் கட்டி காரணமாக குடும்பப் பெண் உயிரிழப்பு!

Share

இன்றையதினம் வட்டுக்கோட்டை – சங்கரத்தை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரி சுட்டான், நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்த ஞானரூபன் வசந்தகுமாரி (வயது 50) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி பாடசாலை வீதி, சங்கத்தரத்தை, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள உறவிரின் வீட்டுக்கு வந்து அங்கு தங்கியிருந்தார். இந்நிலையில் இன்றையதினம் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மூளையில் உள்ள கட்டியே அவரது மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>