வாசிப்பு வாரத்தை முன்னிட்டு சர்வதேசபுகழ் பெற்ற பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு

Share

(24-10-2023)

அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று விசேட காலை ஆராதனை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு சர்வதேசபுகழ் பெற்ற பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி சொற்பொழிவாற்றினார் .

தொடர்ந்து மாணவர்களின் கையெழுத்துப் சஞ்சிகைகளையையும் அவதானித்துடன் நூலகப்புத்தகங்களையும் பார்வையிட்டதோடு எதிர்காலத்தில் சிறுவர் நூலகம் ஒன்றை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் இ.பி.எஸ்.ஐ இணைப்பாளர் ஏ.றாசிக் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள்இஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பழையமாணவர்கள்இபெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>