2ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை பொன்னாலைக் கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்!

Share

பு.கஜிந்தன்

2ம் திகதி திங்கட்கிழமையன்று அதிகாலை பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது.

வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>