Year:
2024
வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “விகிதாசாரத் தேர்தலின் கீழ் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், வெற்றிக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றிகள். விசேடமாக பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாத வடமாகாண மக்கள், இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு நன்றிகளை தெரவித்துக்கொள்கிறேன். அத்துடன் இலங்கை வரலாற்றில் முதலாளித்துவ போக்குக் கொண்ட ஊழல் அரசியல்வாதிகளை புறந்தள்ளி மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கிய இலங்கை மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இந்த கருத்துக்களையே தமது ஜனாதிபதி அநுரகுமாரவும் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
Sam Daniel
November 16, 2024
வடமாகாண மக்கள் இனவாதத்தைப் புறந்தள்ளி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தமைக்கு விசேட நன்றி என பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவிப்பு
Sam Daniel
November 16, 2024
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பிரச்சினைகளை கையாள உள்ளேன்
Sam Daniel
November 16, 2024