5 நாட்கள் தொடர் காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Share

5 நாட்கள் தொடர் காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

தொடர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த நாராயணசமி கோவத்தனன் (வயது 42) என்ற 3 பிள்ளைகளின் தந்தை கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் நேற்றையதினம் (11) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிலமணி நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>