Category: இலங்கை அரசியல்
முன்னாள்-இன்னாள் எம்.பி.க்களுக்கு அநுரகுமார அரசு வைத்த ”ஆப்பு ”
Sam Daniel
February 19, 2026
பிரபல கன்னட நடிகை ராஷ்மி லீலா மரணம்
Sam Daniel
February 19, 2026
எகிய ராஜ்ஜிய என்ற வரைபை அப்போதிருந்த அரசாங்கத்தோடு சேர்ந்து தயாரித்தது தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் ஆகும்.ஏனைய கட்சிகளுக்குள் ஜேவிபியும் அடங்கும்.எனவே இந்த விடயத்தில் அந்த இடைக்கால வரைபு தமிழரசுக் கட்சியின் குழந்தையுந்தான்.ஜேவிபியின் குழந்தையுந்தான்.அதனால் அந்த வரைபை தமிழரசுக் கட்சியும் ஜேவிபியும் அதாவது அரசாங்கமும் இணைந்து முன்னெடுக்கும் ஆபத்துக்கள் இருப்பதாக கஜேந்திரக்குமார் சந்தேகிக்கிறார். —————————————————————————— கடந்த 19ஆம் திகதி அதாவது நேற்றைக்கு முதல்நாள் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நடக்கவிருந்த சந்திப்பு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. தமிழரசுக் கட்சி அந்தச் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே குரலில் முன்வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது.அதற்கான அழைப்பை முன் வைத்ததும் தமிழ்க் கட்சிகள்தான் என்று சுவிற்சர்லாந்து தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கட்சிகளுக்கு இடையில் உள்ள முரண்பாடு அந்தச் சந்திப்பை தமிழரசுக் கட்சி தவிர்த்தமைக்கு காரணம் என்று ஊகிக்கப்படுகிறது. அண்மை மாதங்களாக அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்று ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியைத் தொடங்கலாம் என்று கஜேந்திரக்குமார் எச்சரித்து வருகிறார்.அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அவ்வாறு உண்டு.ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்து செல்ல அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் எச்சரிக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தவர் அவ்வாறு எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படும் அந்த இடைக்கால வரைபை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததை கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார். இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதனால் புதிய யாப்புருவாக்க முயற்சி ஒன்றில் இந்த அரசாங்கம் ஈடுபடத் தேவையான பலம் அதற்கு உண்டு என்றும் அவர் நம்புகிறார். எகிய ராஜ்ஜிய என்ற வரைபை அப்போதிருந்த அரசாங்கத்தோடு சேர்ந்து தயாரித்தது தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் ஆகும்.ஏனைய கட்சிகளுக்குள் ஜேவிபியும் அடங்கும்.எனவே இந்த விடயத்தில் அந்த இடைக்கால வரைபு தமிழரசுக் கட்சியின் குழந்தையுந்தான்.ஜேவிபியின் குழந்தையுந்தான்.அனால் அந்த வரைபை தமிழரசுக் கட்சியும் ஜேவிபியும் அதாவது அரசாங்கமும் இணைந்து முன்னெடுக்கும் ஆபத்துக்கள் இருப்பதாக கஜேந்திரக்குமார் சந்தேகிக்கிறார். பல வாரங்களுக்கு முன்பு அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நடந்த ஒரு சந்திப்பின் பின் சுமந்திரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் என்ன பதிந்தார் என்பதையும் கஜன் சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பதிவில் சுமந்திரன் எகிய ராஜ்ஜிய குறித்து ஆர்வமாக இருப்பது தெரிகிறது. இத்தகையதோர் பின்னணியில்தான் கஜேந்திரகுமார் எகிய ராஜ்ஜியவுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் எதிரானவைதான் என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பிறக்கம் செய்யும் உள்நோக்கம் அங்கே உண்டு என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். இந்த முரண்பாடுகள்,சந்தேகங்கள் என்பவற்றின் விளைவாகவே கடந்த 19ஆம் திகதி சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட அந்தச் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தின் அனுசரணையோடு தமிழ்க் கட்சிகளை ஒரே மேசையில் இருத்துவதற்கு எடுக்கப்பட்ட ஆகபிந்திய முயற்சி அது.அந்த முயற்சி குழப்பப்பட்டமையானது இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதைக் காட்டுகிறதா ? இந்த இடத்தில் மூன்று முக்கியமான விடையப் பரப்புகளில் தமிழ் மக்களுக்குத் தெளிவு அவசியம். முதலாவதாக அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா? இந்த அரசாங்கம் எதிர்பாராமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசாங்கம். அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைகூட புரட்சிகரமானது அல்ல.கோத்தாபய பெற்ற அதே பெரும்பான்மை.எனவே இந்த வெற்றியை எப்படித் தக்கவைப்பது என்ற சவால் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.அதைவிட மேலதிகமாக,அண்மையில் ரில்வின் சில்வா சீனாவுக்குப் போனபோது அங்கே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவருக்கு வழங்கிய ஆலோசனை தொடர்பாக சிங்கள ஊடகங்களில் வெளிவந்தது. குறைந்தது 15 ஆண்டுகள் ஆட்சி செய்தால்தான் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மாற்றங்களைச் செய்யலாம் என்பதே அந்த ஆலோசனையாகும். அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அதன் வாக்கு வங்கியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி வளர்த்தெடுப்பது என்றுதான் சிந்திக்கும்.அப்படிச் சிந்தித்தால் இனப் பிரச்சினையில் கை வைக்கக்கூடாது. இதோ தீர்க்கப் போகிறோம் என்று ஒரு தோற்றத்தைக்கட்டியெழுப்பலாம். அதன் மூலம் காலத்தைக் கடத்தலாம். மேலும்,இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் விளைவு. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை நிமிர்த்த வேண்டிய பொறுப்பு அதற்கு உண்டு. அடுத்த தேர்தல்களில் கிடைக்கப் போகும் வெற்றியை அதுதான் பெருமளவுக்குத் தீர்மானிக்கும். எனவே இந்த அரசாங்கம் இனப் பிரச்சினையில் கையை வைத்து நிலைமைகளைக் …
Sam Daniel
February 19, 2026