கனடாவில் தமிழர் அரசியலில் எழுச்சியும் வீழ்ச்சியும்

Share

2025 நடைபெற்று முடிந்த இரண்டு இடைத்தேர்தல்களின் ஆழமான பகுப்பாய்வு

✦••═════ ஈழத்து நிலவன்════════••✦

கனடாவில் ஈழத் தமிழரின் அரசியல் பயணம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது. 2025 செப்டம்பர் 29 அன்று ரொறன்ரொ நகரசபையின் 25வது வட்டாரத்திற்கும் மார்க்கம் நகரசபைக்கான 7ம் வட்டாரத்தின் இடைத்தேர்தல்கள், தமிழர் சமூகத்திற்குள் காணப்படும் மாற்றுக் கருத்துக்கருத்துக்களையும் நேர்மையற்ற தன்மையையும் பொருத்தமற்ற தமிழ் பேசும் வேட்பாளர்கள் பதவி ஆசை கொண்டு போட்டியில் குதித்ததும் என பலவிதமான மாறுபட்ட நிலைகளைக் காட்டின. இவ்வாறான நிலையில் ரொறன்ரோ நகரசபைக்கு நீதன் சண்முகராஜா வெற்றிபெற்று நகரசபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்திய நிலையில், மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டாரத்தில் இரண்டு தமிழர் போட்டியாளர்கள் வாக்கைப் பிரித்ததால் வெற்றி வாய்ப்பு கையிழந்தது. இவை இரண்டும் சேர்ந்து, தமிழர் அரசியல் பங்கேற்பின் சாத்தியங்களையும் சவால்களையும் தெளிவுபடுத்துகின்றன. இதே மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் முன்னர் பல தடவைகள் லோகன் கணபதி மற்றும் யுனிற்றா நாதன் ஆகியோர் வெற்றிபெற்ற தேர்தல்களின்போது ஒரு தமிழ் பேசும் வேட்பாளரே போட்டியில் நின்றார் என்பது குறிப்பிடததக்கது.

29ம் திகதி நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.

✦ ரொறன்ரோ நகரசபை — Ward 25 (Scarborough—Rouge Park)

● நீதன் சண்முகராஜா — 5,174 (26.86%) ✅ வெற்றி

● அனு சிறீஸ்கந்தராஜா — 3,374 (17.58%)

● ஷான் அல்லன் — 2,834 (15.23%)

● பிற தமிழர் வேட்பாளர்கள்: சியான் சின்னராசா ( (1,441), அனித்தா (507).

● மொத்த வேட்பாளர்கள்: 20 பேர்

● தகுதி பெற்ற வாக்காளர்கள்: 77,000+

● வாக்காளர் வருகை: 19,260 (24.9%). (மூன்றில் ஒரு வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்துள்ளார் என்பது பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது

2018இல் வெற்றியை 154 வாக்குகள் வித்தியாசத்தில் தவறவிட்ட நீதன் சண்முகராஜா , இம்முறை வலுவான சமூக ஆதரவுடனும், தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி வாரியத்தில் பெற்ற அனுபவத்துடனும் மீண்டும் வெற்றி பெற்றார். இதன் மூலம், பார்த்தி கந்தவேலுடன் சேர்ந்து டொரன்டோ மாநகரசபையில் தற்போது இரண்டு தமிழர் உறுப்பினர்கள் உள்ளனர். இது கனடா நகராட்சி அரசியலில் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டமாக அமைகிறது.

ஆனால் மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார முடிவுகள் வித்தியாசமானவை. இதில் இரண்டு தமிழ் பேசும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வெற்றிபெற்ற பெண்வேட்பாளர் பெற்ற வாக்குகளிலும் அதிகமானவை. இது ஒன்றே தமிழ் பேசும் பிரதிநிதித்துவம் இழக்கப்பெற்றதற்கான காரணமாக விளங்குகின்றது. இருவர போட்டியிட்ட நிலையில் சில தமிழர் அமைப்புக்களும் பக்கச்சார்பாக தமிழர்கள் என்ற அடையாளத்தை நிராகரித்து ஆதரவுவழங்கியமை இங்கு கண்டிக்கப்பட வேண்டிதொன்றாகும்.

✦. மார்க்கம் நகரசபை — Ward 7

● நிமிஷா பட்டேல் — 2,954 ✅ வெற்றி

● கிள்ளி செல்லையா — 2,098

● ஆராணி முருகானந்தம் — 2,055

● மொத்த வேட்பாளர்கள்: 8 பேர்

● மொத்த வாக்குகள்: 18,183

● வாக்காளர் வருகை: 22.3%.

இங்கு எண்ணிக்கைகள் துல்லியமாகச் சில விடங்களைச் சொல்கின்றன. இரண்டு தமிழர் போட்டியாளர்கள் சேர்த்து 4,153 வாக்குகள் (50.7%) பெற்றுள்ளனர். ஆனால் வாக்குகள் பிரிந்ததால், வெற்றி 2,954 வாக்குகளுடன் நிமிஷா பட்டேலுக்குலுக்கு விழுந்துள்ளன. . தமிழர் ஆதிக்கம் கொண்டிருந்த இந்த வட்டாரம், வாக்குப் பிரிவினை காரணமாக இரண்டாவது முறை தொடர்ந்து இழக்கப்பட்டுள்ளது கவலைக்குரியதே!

✦. புள்ளிவிபரப் பார்வையில்

➊. குறைந்த வாக்காளர் வருகை: டொரன்டோவில் 25%, மார்க்கத்தில் 22% turnout மட்டுமே. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை.

➋. வாக்கின் பயன்முறை (Vote Efficiency): டொரன்டோவில் 20 வேட்பாளர்களுக்கிடையே நீதன் சண்முகராஜா பெற்ற 5,174 வாக்குகள் வெற்றிக்கு போதியது. சமூக ஒருங்கிணைப்பு இங்கு வேலை செய்தது.

➌. வாக்குப் பிரிதல் (Vote Splitting): மார்க்கத்தில் தமிழர் பெரும்பான்மை இருந்தும், இரண்டு வேட்பாளர்களுக்குள் போட்டி இருந்ததால் தோல்வி ஏற்பட்டது.

➍. பல நிலைகளில் தமிழர் பிரதிநிதித்துவம்: Scarborough—Rouge Park பகுதியில் தற்போது நான்கு தளங்களிலும் தமிழர் கைகள் ஓங்கியுள்ளன — மத்திய, மாகாண, நகராட்சி, கல்விச்சபை ஆகிய நான்கு அரச அமைப்புக்களில் தமிழர் பிரதிநிதித்துவும் நிலைத்திருக்கின்றது.

✦. கனடாவில் தமிழர் தற்போதைய அரசியல் பிரதிநிதித்துவம்

● மத்திய அரசாங்கம் : கரி ஆனந்தசங்கரி (அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்).

● மாகாணம் (Ontario Provincial): விஜய் தணிகாசலம் (இணை அமைச்சர், MPP).
லோகன் கணபதி – மாகாண அமைச்சரவையில் பாராளுமன்றச் செயலாளர் பதவி

● நகராட்சி (Municipal): நீதன் சான் & பார்த்தி கந்தவேல் (Toronto City Councillors).

● கல்விச் சபை: அனு சிறீஸ்கந்தராஜா (Trustee).

இதனால் Scarborough—Rouge Park பகுதி ஒரே இடத்தில், கனடா அரசியலின் நான்கு அடுக்குகளிலும் தமிழர் அதிகாரத்தில் உள்ள அபூர்வமான நிலையை உருவாக்கியுள்ளது.

✦. வரலாற்றுப் பின்னணி

1980களிலும் 1990களிலும் ஈழத் தமிழர்கள் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபோது, முதன்மை கவனம் உயிர்வாழ்வு, கல்வி, பொருளாதார நிலைத்தன்மை என்பவையிலேயே இருந்தது. ஆனால் 2000களில் தொடங்கி கல்வி வாரியத் தேர்தல்களிலும் நகராட்சி அரசியலிலும் பங்குபெறத் தொடங்கினர்.

இப்போது, கனடா தமிழர்கள் “புலம்பெயர் சமூகத்திலிருந்து அரசியல் அதிகாரம் பெற்ற சமூகமாக” மாறி வருகின்றனர். இது தேர்தல் வெற்றியை மட்டும் குறிக்கவில்லை; தமிழர் அடையாளம், மொழி, கலாச்சாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் நிலைத்தன்மையையும் குறிக்கிறது.

✦. எதிர்கால சவால்கள் மற்றும் வாய்ப்புகள்

➀. ஒருங்கிணைப்பு அவசியம்: மார்க்கத்தில் நடந்தது இனி நடக்கக் கூடாது. ஒரே வட்டாரத்தில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்.

➁. Turnout உயர்த்தல்: 25% turnout தமிழர் அரசியல் வலிமையை பிரதிபலிக்கவில்லை. அடுத்த தேர்தலில் 40% குறைந்தபட்ச இலக்காக வாக்களிப்பில் இருக்க வேண்டும்.

➂. அரசியல் பயிற்சி: இளம் தலைமுறைக்கான தமிழர் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்பட வேண்டும்.

➃. கூட்டணி அரசியல்: பிற குடியேற்ற சமூகங்களுடனும் கூட்டணி அமைத்தால் தமிழர் செல்வாக்கு விரிவடையும்.

➄. தமிழ் ஊடக பங்கு: தேர்தல் செய்திகள் மட்டுமல்லாது, அரசியல் விழிப்புணர்வு, விவாதங்கள், கல்வி ஆகியவற்றையும் முன்னெடுக்க வேண்டும்.

✦. 2025 இடைத்தேர்தலில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்

● டொரன்டோவின் வெற்றி: ஒருங்கிணைப்பு இருந்தால் வெற்றி சாத்தியமென்பதை நீதன் சான் நிரூபித்தார்.

● மார்க்கத்தின் தோல்வி: வாக்குப் பிரிவினை இருந்தால் பெரும்பான்மை வாக்குகள் இருந்தாலும் தோல்வி தவிர்க்க முடியாது.

இரண்டு பாடங்களும் தெளிவாகச் சொல்கின்றன:
“ஒன்றிணைந்தால் வெற்றி, சிதறினால் தோல்வி.”

✦. 2026 நோக்கிய திட்டங்கள்

அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான திட்டங்கள்:

● ஒருங்கிணைப்பு கவுன்சில்: ஒரே வேட்பாளர் தேர்வு செய்ய தமிழர் சமூக ஆலோசனைகள்.

● GOTV இயக்கம்: வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதற்கான தீவிர பிரசாரம்.

● தரவு சார்ந்த தேர்தல் திட்டம்: குறைந்த வாக்களிப்பு உள்ள தமிழ் பகுதிகளை இலக்கு வைப்பது.

● இளைஞர் பங்கேற்பு: தன்னார்வம், internship, campaign அனுபவம் மூலம் அரசியலுக்குத் தயாராக்குதல்.

2025 இடைத்தேர்தல்கள் தமிழர் சமூகத்திற்கு வெற்றியும் எச்சரிக்கையும் ஒன்றாக வழங்கியுள்ளன.

● ரொற்ரோவில் நீதன் சான் வெற்றி, தமிழர் குரலை வலுப்படுத்தியது.

● மார்க்கத்தில் தோல்வி, ஒருங்கிணைப்பு இல்லையேல் அந்தக் குரல் மங்கக்கூடும் என்பதைக் காட்டியது.

எனவே, 2026 தேர்தலுக்கான ஒரே பாதை:
ஒற்றுமை + திட்டமிடல் + turnout உயர்த்தல் + ஒருங்கிணைந்த வேட்பாளர்.

இதன் மூலம், கனடா தமிழர் வரலாறு புதிய உச்சியை அடையும்; வெறும் பங்கேற்பாளர்களாக அல்லாது, அரசியலை வடிவமைக்கும் சமூகமாக மாறுவார்கள்.

✒️ எழுதியவர்: ஈழத்துத் நிலவன்

தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ஆய்வாளர்
30/09/2025

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>