தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பெரம்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய், அங்கிருந்து நேராக கொளத்தூர் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக விஜய்யின் பிரசார வாகனம் கொளத்தூர் நோக்கி சென்ற நிலையில், அவரது வாகனத்தை சுற்றி பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கொளத்தூரில் விஜய் பேசியபோது இடையில் ஆடியோ பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 4 நிமிடங்களில் விஜய் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, கொளத்தூரில் இருந்து வில்லிவாக்கம் புறப்பட்டார். ஆனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்த விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே, விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் வில்லிவாக்கத்தில் கூடியிருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்களிடம் இது குறித்து பேசிய த.வெ.க. மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன், “பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வாகனம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவே விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் மற்றொரு நாளில் வில்லிவாக்கம் தொகுதிக்கு மீண்டும் வருவார். பொதுமக்களும், தொண்டர்களும் பாதுகாப்பாக கலைந்து செல்ல வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பிரசாரம் ரத்து
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>