மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிம சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டுமென கனிமொழி கூறினார்

Share

மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிம சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டுமென கனிமொழி கூறினார். இது தொடர்பாக, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள எம்எம்டிஆர் சட்டத் திருத்த மசோதா 2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். 2024 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையே இத்திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் நோக்கத்தோடு அமைந்துள்ளது. மத்திய பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>