LOADING

Type to search

சினிமா

தனுஷின் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியீடு

Share

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகை நித்யாமேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இட்லி கடை திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில், “நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் ஆகிய நடிகர்களின் தேதி பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையவில்லை. இன்னும் 10 சதவீத படப்பிடிப்புகள் மீதம் உள்ளது. நல்ல படத்தை அவசர அவசரமாக வெளியிட வேண்டாம் என நினைக்கிறோம். எனவே விரைவில் இட்லி கடை படத்தின் புதிய வெளியீடு தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.45 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.