சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி.
Share

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியீடு ஆகிறது.
இந்த படத்திற்குப் பிறகு சுந்தர் சி மூக்குத்தி அம்மன்-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். மூக்குத்தி அம்மன்-2 படம் நிறைவடைந்ததும், கார்த்தியை வைத்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
கார்த்தி தற்போது ‘சர்தார்-2’, ‘வா வாத்தியாரே’ படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் ‘கைதி-2’ படத்தில் நடிக்க போவதாகவும் பேசப்படுகிறது. மேலும், சிறுத்தை சிவா உடன் மீண்டும் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.