LOADING

Type to search

மலேசிய அரசியல்

முள்ளி வாய்க்கால் நினைவுதூபி தரைமட்டம் : சிங்கள காடையர் கூட்டம் இனவெறி ஆட்டம் – மலேசிய திராவிட இயக்க மூத்த தலைவர் காட்டம்

Share

கோலாலம்பூர், ஜன.12:

ஈழத் தமிழ் மக்களின் சம உரிமைக்காக ஜனநாயக முறையில் போராடிய தந்தை செல்வாவும் இராணுவ ரிதியில் களம் கண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனும் சிங்கள இனவெறிப் போக்காளர்கள் ஒருகாலும் மாற மாட்டார்கள் என்று சொன்னதை, அந்தக் காடையர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்று மலேசிய திராவிட இயக்கத்தின் மூத்தத் தலைவர் இரெ. சு. முத்தையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் போரினாலும் முறைதவறிய இராணுவ நடவடிக்கையாளும் இலட்சக் கணக்கான தமிழர்கள் ஈழ மண்ணில் தங்களின் இன்னுயிரைத் துறந்ததன் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, கடந்த 8ம் நாள் வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக, கமுக்கமாக உடைக்கப்பட்டது அடாத செயல் ஆகும்.இத்தகைய கொடுஞ்செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று இரெ. சு. முத்தையா வெளியிட்ட கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.