LOADING

Type to search

கனடா சமூகம்

MPP Logan Kanapathi hosts Virtual Education Roundtable with Minister of Education Stephen Lecce

Share

ஓன்றாரியோ எம்.பி.பி லோகன் கணபதி கல்வி அமைச்சருடன் இணைந்து நடத்திய பயனள்ள கலந்துரையாடல்

ஜூன் 15 கடந்த செவ்வாய்கிழமையன்று அன்று, தமிழ் பேசும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்சேயுடன் இணைந்து கல்வித்திட்டம் சார்ந்த கலந்துரையாடலை இணைய வழி ஊடாக நடத்தினார்.

மேற்படி கலந்துரையாடலில், 80 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆகியோருடன் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டபோது அங்கு யோர்க் பிராந்தியத்தில் இருந்து ஒன்ராறியோ அரசாங்கம் கல்வி ஆண்டுக்கு மேற்கொண்டுள்ள மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய எம்பிபி லோகன் கணபர் அவர்கள் “ 2021-22 ஆண்டின் எஞ்சிய பகுதிக்கு ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் செப்டம்பரில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் -19 தொற்றானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விதிவிலக்காக சவாலான நேரத்தை வழங்கியுள்ளது என்பதை ஒன்ராறியோ அரசாங்கம் புரிந்துகொள்கிறது.

“ஒரு வலுவான பொதுக் கல்வி முறையைக் கொண்ட ஒரு நாட்டில் வாழ்வதற்கு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள், இந்த அரசாங்கத்தின் முக்கிய கவனம், கனடாவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும், கோவிட் சவால்களை மீறி, இந்த மாகாணம் கல்வியில் மேன்மையுற்று இருப்பதை உறுதி செய்து வருகிறது. 19 ”என்றார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லேச்சே அவர்கள் பின்வருமாறு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

“வரவிருக்கும் கல்வி ஆண்டுக்கான ஒன்ராறியோ அரசாங்கத்தின் முன் முயற்சிகளின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு அமையும் குறிப்ப்hக மாகாணத்தில் தரம் 9 இற்கு உரிய கணித பாடத்திட்டம் புதுப்பிக்கப்படவுள்ளது.

எமது அமைச்சின் நோக்கம் எதுவென்றால், நிதி எழுத்தறிவு, குறியீட்டு முறை மற்றும் தரவு எழுத்தறிவு ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்தி, நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கணிதத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மாணவர்களுக்குக் காண்பிப்பதற்காக தரம் 9 கணித பாடத்திட்டம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

எமது ஒன்றாரியோ மாகாணத்தின் நான்கு ஆண்டு, 200 மில்லியன் டாலர்கள் செலவில் கணித பாடத்திற்குரிய புதிய பாடத்திட்டம் தயாராகின்றது இதில் புதிய கணிதத்தை மையமாகக் கொண்ட கற்றல் ஆதரவு மாணவர்கள் எதிர்காலத்தில் வெற்றிபெற முக்கியமான வாழ்க்கை மற்றும் வேலை திறன்களைக் கற்றுக்கொள்வார்கள். இதற்காக தகுதியான ஆசிரியர்கள் பாடசாலைகளில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

எமது பாடத்திட்டம் கடைசியாக 2005 இல் புதுப்பிக்கப்பட்டது, முந்தைய பாடத்திட்டம் பல மாணவர்களை கடுமையாக பாதித்தது, குறிப்பாக, கருப்பு, பழங்குடி, இன, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் சிறப்பு கல்வி மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தின் மூலம் தகுந்த பலனைப் பெற முடியவில்லை.

குறிப்பாக பிரெஞ்சு மொழியில் கற்கும் மாணவர்களுக்கு, தரம் 1-12 முதல், Eureka by T FO என்ற புதிய திட்டம் கணிதத்திற்கான ஆங்கிலத்தில் பயிற்சி பெறும் வகையில் விரிவடைந்துள்ளது.

மேலும் 6-10 வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு, கணிதம் வார இறுதி மற்றும் மாலை உள்ளிட்ட கூடுதல் வகுப்புக்களை நடத்துவதன் மூலம் மேலதிக கணித அறிவை மாணவர்களுக்கு ஊட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக வகுப்புக்களில் அங்கு மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆசிரியர் ஆதரவைப் பெறலாம் மற்றும் சிறிய கற்றல் குழுக்களை அமைப்பதன் மூலமும் மாணவர்கள் அதிக பயன் பெறும் வாய்ப்பு உண்டாகும்” என்றார்

தொடர்ந்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் தகுந்து பதில்களை அளித்தார்.